பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோயாளர் விடுதி மூடப்பட்டது; 34 பேருக்கு கொரோனா!

Date:

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அ்ந்த விடுதியில் 34 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வைத்தியர், இரண்டு தாதியர்கள், ஏழு துணை வைத்தியர்கள், இரண்டு சுகாதார பணியாளர்கள் மற்றும் 22 நோயாளிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஒரு நோயாளி மற்றும் தாதி கொரோனா தொற்றிற்கு உள்ளானது கண்டறியப்பட்டதை தொடர்ந்து  நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  34 பேர் தொற்றிற்குள்ளாகியது கண்டறியப்பட்டது.

இந்த சூழ்நிலை காரணமாக பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியை மூட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் லால் காந்த முறைப்பாடு

அமைச்சர் கே.டி. லால் காந்த, தனது சொத்துக்கள் குறித்த அறிவிப்பு தொடர்பாக...

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவை பதவிவிலக உத்தரவிட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி...

யாழ் விபத்தில் தந்தை, மகன் பலி

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்