மன்னார் மாவட்டத்தில் சினோபார்ம் 2வது தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

Date:

மன்னார் மாவட்டத்தில் கடந்த யூலை மாதம் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு இன்று திங்கட்கிழமை(9) முதல் 2வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம்,6 ஆம்,7 ஆம் திகதிகளில் சினோபாம் முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி மன்னார் பிராந்திய சேவைகள் பணிமனை,மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இன்று திங்கட்கிழமை (9) முதல் வழங்கி வருகின்றனர்.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தடுப்பீசி செலுத்தும் நடவடிகை இடம் பெற்று வருவதுடன் பேசாலை சென் மேரிஸ் கல்லூரியிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது,

மேலும் இன்றைய தினம் மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை எருக்கலம்பிட்டி பிரதேச வைத்தியசாலை,மற்றும் தலைமன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றில் சினோபாம் கொரோனா தடுப்பூசியின் 2வது தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்