தெரிந்து கொள்ளுங்கள்! உடற்பயிற்சி செய்தபின் எவ்வளவு நேரத்தில் குளிக்க வேண்டும்.

Date:

உடற்பயிற்சி செய்தபின் எவ்வளவு நேரத்தில் குளிக்க வேண்டும் தெரியுமா?

தினமு ம் காலையில் எழுந்து வோர்க் அவுட் செய்யும் நபராக இருந்தால் உடற்பயிற்சிக்கு பிறகு குளிப்பது நல்லது. உடற்பயிற்சிக்கு பிறகு குளிப்பது வியர்வையால் ஏற்படும் பாக்டீரியா பெருக்கத்தை தடுக்கிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள். சரி உடற்பயிற்சிக்கு பிறகு எப்போது குளிக்க வேண்டும் என அறிந்து கொள்வோம். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தாலே வியர்வையில் குளிக்க ஆரம்பித்து விடுவோம். ஒரே வியர்வை துர்நாற்றம், அசெளகரியம் இவற்றை போக்க உடனே குளிக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே குளிக்கலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் உடற்பயிற்சி செய்து முடித்த சிறிது நேரம் கழித்து குளிக்க செல்வது நல்லது என்கிறார்கள். ஏனெனில், வியர்வையால் உங்க சருமத்தில் பாக்டீரியா பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சருமத்தில் பாக்டீரியாக்கள் விரைவாக பெருகுவதால் தடிப்புகள் அதிகரிக்கிறது. பிரேக் அவுட்களின் அபாயம் குறைகிறது. சரி வோர்க் அவுட்டிற்கு பிறகு எப்போது குளிக்க வேண்டும் வாங்க தெரிஞ்சுக்கலாம். வொர்க் அவுட்டிற்குப் பிறகு குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம். அதே மாதிரி நீங்கள் ஜிம்மில் இருந்தோ அல்லது உடற்பயிற்சியில் இருந்தோ வெளியேறுவதற்கு முன்பு கூல் டவுன் செய்வது அவசியம். சிறிது ரிலாக்ஸ் செய்வது, கை கால்களுக்கு நீட்சி அளிப்பது போன்ற கூல் டவுன் விஷயங்களை செய்யலாம். இது உங்களை உடற்பயிற்சிக்கு பிறகு பழைய நிலைக்கு கொண்டு வர உதவி செய்யும். இது உங்கள் இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.

நீங்கள் நல்ல ரிலாக்ஸ் ஆன பிறகு 20-30 நிமிடங்கள் கழித்து குளிக்க செல்லலாம். இந்த நேரத்தில் உங்களுடைய உடல் மறுசீரமைக்க தண்ணீர் மற்றும் ஜூஸ் குடிப்பதை செய்யுங்கள். குளித்த பிறகு உடலை நன்றாக துடைத்து சுத்தம் செய்யுங்கள். இந்த உடற்பயிற்சிக்கு பிறகு செய்யும் இந்த சுத்த பராமரிப்பு பாக்டீரியா பெருக்கத்தை தடுக்கவும்.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்