ஆவி பிடிக்கும் போது இவற்றை கவனியுங்கள்.

Date:

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கும், பாதிப்பில் இருந்து மீள்வதற்கும் ஆவி பிடிப்பதும் ஒரு சிகிச்சையாக மாறி உள்ளது. ஆவி பிடிக்க பலரும் பல யுக்திகளை கையாள்கின்றனர். எவ்வளவு நேரம் ஆவி பிடிப்பது என்று தெரியாமல் ஆர்வ மிகுதியால் அதிக நேரம் ஆவி பிடித்து மூக்கின் உள் பகுதியில் வெப்பத்தால் வெந்து புண்ணாகும் அளவுக்கு சிலர் ஆவி பிடித்து விட்டு அவதிபடுகின்றனர்.

ஆவி பிடிப்பது என்பதும் ஒருவிதமான தற்காப்பு தான். பெருந்தொற்று கிருமிகள் முதலில் தாக்குதல் நடத்தும் பகுதிகளாக வாய் மற்றும் மூக்கு உள்ளது. ஆவி பிடிப்பதால் இத்தகைய கிருமிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன.

5-ல் இருந்து 10 நிமிடங்கள் மட்டும் ஆவி பிடித்தால் போதுமானது. காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் மட்டும் பிடித்தால் போதும். ஆவி பிடிப்பதற்கு தலைவலி தைலம், கற்பூரம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆவி பிடிப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், துளசி, கற்பூரவள்ளி இலை ஆகியவற்றை நீரில் கொதிக்கவிட்டு அதில் ஆவி பிடிக்க வேண்டும். நீண்ட நேரம் ஆவி பிடித்தல் என்பது தற்காப்பு இல்லை.

spot_imgspot_img

More like this
Related

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்