ஜனாதிபதி பிரிட்டன்-அமெரிக்கா செல்கிறார்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டுப் பயணம் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜனாதிபதி முதலில் பிரிட்டன் செல்ல உள்ளார். லண்டனில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஜனாதிபதியின் முடிவைத் தொடர்ந்து, மாநாட்டு அமைப்பாளர்கள் இந்த முடிவைப் பாராட்டி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். கூடுதலாக, அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த ஜனாதிபதியை அழைத்திருந்தனர்.

அந்த அழைப்பை ஏற்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

லண்டன் உச்சிமாநாட்டிற்குப் பிறகு நேரடியாக அமெரிக்கா செல்லவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர் வாஷிங்டனில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இம்முறை பயணித்தால், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐநா பொதுக்கூட்டத்தில் கோட்டாபய கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பமாப அமையும்.

அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தனது பேத்தியை முதல் முறையாகப் பார்க்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்