துனிசியா ஆர்ப்பாட்டங்களின் எதிரொலி: பிரதமர் நீக்கம்; நாடாளுமன்றம் முடக்கம்!

Date:

துனிசியாவின் பிரதமர் ஹிச்சாம் மெச்சிச்சியை தனது பதவியில் இருந்து நீக்குவதற்கும்,  பாராளுமன்றத்தை முடக்குவதற்கும், அனைத்து பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமையை நிறுத்துவதற்கும், துனிசியாவின் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

துனிசியாவின் பல நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவிற்கு ஜனாதிபதி வந்துள்ளார்.

ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை துனீசிய இஸ்லாமியக் கட்சியான என்னாடாவின் தலைமையகத்தை டோஜூர், கைரூவான் மற்றும் சூஸ்ஸில் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதால் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. பல துனிசிய பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கவச வாகனத்தை எரித்தனர்.

2011 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கத் தவறியதால் நாட்டின் மோசமான பொருளாதார, சமூக மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு  என்னாடா கட்சி பொறுப்பேற்க வேண்டுமென துனிசியர்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்