80 பந்துகள் மீதமிருக்க இலங்கையை உருட்டியெடுத்தது இந்தியா!

Date:

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் எந்த சிரமம், நெருக்கடியில்லாமல் மிக இலகுவாக இந்தியா வெற்றியீட்டியது.

அனுபவமும், ஆட்டத்திறனுமில்லாத இலங்கையணியை ஊதித்தள்ளியது என்றே கூற வேண்டும்.

முதலில் ஆடிய இலங்கை 262 ஓட்டங்களை குவித்த போதும், 500 ஓட்டங்கள் அடித்தாலும் எதிரணியை கட்டுப்படுத்த முடியாத பலவீனமான பந்துவீச்சு வரிசையை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

263 என்ற இலக்கை 36.4 ஓவர்களிலேயே இந்தியா எட்டியது. அதாவது 80 பந்துகள் மீதமிருக்க இந்தியா வெற்றியீட்டியது.

தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 24 பந்துகளில் 43 ஓட்டங்கள் என காட்டடி தொடக்கத்தை வழங்கினார். 5.3 ஓவர்களில் அணி 58 ஓட்டங்களை பெற்றிருந்த போது அவர் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஷிகார் தவண் 86, சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இஷான் கிஷன் 42 பந்துகளில் 59 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

இதில் இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ் இந்தியா சார்பில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகினர்.

இலங்கை சார்பில் தனஞ்ஜய டி சில்வா 49 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினார். வணிந்து ஹசரங்க விக்கெட் விழுத்தவில்லை. ஆனால் ஓட்டவீதம் ஓவருக் 5 என்ற கணக்கில் வைத்திருந்தார். ஏனையவர்கள் ஓவருக்கு 6 இற்கும் அதிக ஓட்டங்களை வாரி வழங்கினர்.

முன்னதாக இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநாயகன் ப்ரித்வி ஷா.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்