மாஸ்டர் பவானியாக நடிக்க முடியவில்லை என கவலைப்படும் நடிகர்

Date:

படத்தில் வில்லன் காதாப்பாத்திரமே கவர்ந்தது

படத்தை பார்த்த அனைவரையும் கவர்ந்தவர் வில்லன் பவானி தான். முன்னதாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தகவல் வெளியானபோது இவருக்கு ஏதாவது ஆகிட்டா என்று ரசிகர்கள் கேட்டனர். படத்தை பார்த்த பிறகே விஜய் சேதுபதி ஏன் வில்லனாக மாறினார் என்பது புரிந்தது.

விஜய் தான் ஹீரோ என்றாலும் மாஸ்டர் விஜய் சேதுபதி படம் என்று விமர்சனம் எழுந்தது. வில்லன் கதாபாத்திரத்தை பார்த்துப் பார்த்து உருவாக்கிய லோகேஷ், ஹீரோவுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று ஆர்.கே. சுரேஷ் ஃபீல் செய்திருக்கிறார். தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு வந்த ஆர்.கே. சுரேஷ் பின்னர் நடிகர் ஆனார். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீரோவாகிவிட்டார். அவர் ஹீரோவாக நடித்த வேட்டை நாய் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

பவானி கதாபாத்திரம் குறித்து ஆர்.கே. சுரேஷ் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நான் வில்லனாக நடிப்பதை மிஸ் பண்ணுகிறேன். அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தில் வந்த பவானி கதாபாத்திரத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தமாக உள்ளது.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்குமாறு யாரும் என்னை அணுகவில்லை. இருந்தாலும் பவானியை மிஸ் பண்ணிவிட்டோமே என்று தூக்கமே வரவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பொருத்தமானது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்