பழைய போகாம்பரை சிறைச்சாலையில் புதிய கைதிகளிடமிருந்து பணம் பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், புதிய சிறைக்கைதிகள் 3 பேரிடமிருந்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ரூ .9,000 பெற்றிருப்பது தெரியவந்தது.
கைதிகள் அவருக்கு ஏன் பணம் கொடுத்தார்கள், இந்த விவகாரத்தின் பின்னணியில் குற்றத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.




