சுனாமி பேபியும் பரீட்சைக்கு தோற்றினார்!

Date:

நாடு முழுவதும் இன்று (1) ஆரம்பித்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சுனாமி பேபியும் தோற்றுகிறார்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியின் போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாஸ், சுனாமி பேபி என்ற பெயரில் பிரபலமானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடத்தில் தற்போது வசித்து வரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றினார்.

இன்று (01) காலை தனது பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ஆலய வழிபாட்டினை பூர்த்திசெய்து மிகவும் உற்சாகத்துடன் தான் பரீட்சைக்கு தோற்றுவதாக அவர் தெரிவித்தார்.

பிறந்த ​​67 நாளில் சுனாமியில் அடித்து செல்லப்பட்ட அபிலாஸ், அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு 18 மணி நேரம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அபிலாஸை 09 தாய்மார்கள் உரிமைகோரினார். நீதிமன்ற உத்தரவுப்படி, டி.என்.ஏ பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டு அவரது சட்டப்பூர்வ தந்தை ஜெயராஜிடம் ஒப்படைக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் எண் 81 இலக்க கட்டிலில் அவர் சிகிச்சை பெற்றதன் காரணமாக “சுனாமி பேபி 81” என்று அவருக்கு பெயரிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்