கர்ப்பப்பையே இல்லாத பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தை!

Date:

பொதுவாக பெண்கள் பருவம் எய்திய உடன் அவர்கள் உடலில் கர்ப்பப்பை செயல்பட துவங்கிவிடும். அதன் பின் அது குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகி விடும். இந்நிலையில் அமெண்டா க்ரூயினினல் என்ற பெண்ணிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதாகியும் பருவம் எய்தாமல் இருந்தார். இதையடுத்து அவர் அவரது பெற்றோர் அந்த சிறுமியின் 17வது வயதில் டாக்டரிடம் கூட்டி சென்று சோதனை செய்த போது டாக்டர்கள் ஸ்கேஷன் செய்து பார்த்தபோது தான் தெரிந்தது. அமெண்டாவிற்கு கர்ப்பப்பையே இல்லை என்று. இதனால் அவர் குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார் என டாக்டர்கள் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அந்த அமெண்டா வளர்த்து 32 வயதாகிவிட்டார். அவருக்கு ஜான் என்பவருடன் திருமணமும் ஆகிவிட்டது. அவர்கள் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடந்தி வந்த நிலையில் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ண இருந்தது. டாக்டர்களிடம் இது குறித்து தற்போது சென்று கேட்ட போது. கர்ப்ப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் இது சாத்தியம் என டாக்டர்கள் சொல்லியுள்ளனர்.

அதன் படி இறந்த ஒருவரின் கர்ப்பப்பை சரியாக நேரத்தில் அவரது உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு அமெண்டாவில் உடலில் பொறுத்தப்பட்டது. அதன் பின் அவரது கர்ப்பப்பைக்குள் செயற்கை முறையில் கருவுற்றல் செய்யப்பட்டு அவர் கர்ப்பமானார். இந்நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் அழகான

பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்