பாம்பன் மீன் பிடி விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: பாதிக்கபட்ட மீனவர்களிடம் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை

Date:

நேற்று காலை பாம்பனில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்வோம் என ஒலிபெருக்கி மூலமாக பாம்பன் மீனவர்களை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிககைக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்நிலையில் பாம்பனை சேர்ந்த லிம்பர்ட் மற்றும் காலின்ஸ், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகுகள் மீது இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில்; மூன்று விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டிருந்த 20க்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து பாம்பன் நோக்கி வந்தனர்.

இதனால் மீனவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்ட விசைப்படகு உரிமையாளர் லிம்பர்ட்யிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை மீன்வளத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீன் பிடி தடைகாலம் முடிந்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க மூன்று முறை கடலுக்கு சென்றுள்ளனர்.மூன்று முறையும் இலங்கை கடற்படை பாம்பன் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்