எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் வாகன பேரணியை நடத்தினர்.
புறக்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்திலிருந்து வாகன பேரணியாக பாராளுமன்றம் வரை சென்றனர்.
உழவு இயந்திரங்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அவர்கள் பேரணியாக சென்றனர்.





