கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா
அதிபரால் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண நேற்றைய தினம்
கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்
கொண்டிருந்தார்.
அதன் போது வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண
அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கிளிநொச்சி பளை பொலீஸ் நிலைய
அதிகாரியின் ஏற்பாட்டில் நேற்றையதினம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழ்நிலை காரணமாக கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு
உட்பட்ட 35 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.52




