தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு பாலூட்டும் பசு!

Date:

தேனி மாவட்டத்தில் தாய் இல்லாத ஆட்டுக்குட்டிக்குப் பசுமாடு ஒன்று வளர்ப்புத்தாயாக அன்பு செலுத்தி வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கணேசன். இவர் 50 ஆடுகள், 8 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் கொட்டகையில் வளரும் ஆடு ஒன்று இரு மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றது. ஆட்டுக்குட்டி பிறந்த ஒரு மாதத்தில் தாய் ஆடு கழிச்சல் நோய் பாதிக்கப்பட்டு இறந்தது.

இதனால் ஆட்டுக்குட்டிக்கு புட்டிபால் கொடுத்து வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் அதே இடத்தில் வளர்க்கப்படும் பசுமாடு ஆட்டுக்குட்டி தடவிக் கொடுத்து அன்புடன் வெளிக்காட்டி தாய்மையுடன் பழகியது.

இப்போது தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்குத் தாயாக இருந்து கடந்த 2 மாத காலமாகப் பால் கொடுத்து வளர்த்து வருகிறது.

அதேவேளைக் கொட்டகையில் வளரும் பிற ஆட்டுக்குட்டிகளுடன் இந்த பசு பழகுவது இல்லை. தாயை இழந்த ஆட்டுக்குட்டியுடன் மட்டுமே ஒட்டி உறவாடி தாய்மையை வெளிப்படுத்துகிறது என அதனை வளர்க்கும் கணேசன் சொல்லியிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்