யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது.
ஊர்காவற்துறை, சுருவில் கடற்கரை பகுதியில் இன்று (15) காலை திமிங்கிலம் கரையொதுங்கியது.
அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து, கடலில் கலந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் துகள்களால் ஏராளம் கடலுயிர்கள் உயரிழந்து கரையொதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த திமிங்கிலத்தின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.




