உலகின் மிகக்கொடிய விஷம் எது தெரியுமா? இதன் ஒரு கிராம் 1000 பேரை கொல்லும் திறன் கொண்டதாம்…

Date:

சைனைடு பற்றி கேள்விபட்டிருப்பீர்கள் வாயில்பட்டால் உடனடியாக நம் உயிர் போய்விடும் என நம் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அதை விட கொடிய விஷம் ஒன்று உள்ளது அதை பற்றிதான் சொல்கிறது இந்த கட்டுரை முழு விபரத்தை கீழே காணுங்கள்.

நீங்கள் எல்லாம் சைனைடு குறித்து கேள்விபட்டிருப்பீர்கள். இது மிகவும் மோசமான விஷம் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த சைனைடு நம் உடலுகு்கு சென்றால் உடனே மரணம் தான். ஆனால் இதை விட கொடிய விஷம் ஒன்று நம் உலகில் உள்ளது அதை பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.

​போலோனியம் -210

 

போலோனியம் -210 இது மிகவும் கொடூரமான விஷம், இதை பற்றி மிகச்சிலருக்கு தான் தெரியும். இதின் ஒரு கிராம் விஷம் ஆயிரக்கணக்கான மக்களை கொள்ளும் அளவிற்கு அபாயம் கொண்டது. அதனாலேயே இது உலகின் மிக கொடூரமான விஷம் என மக்களால் அழைக்கப்படுகிறது.

​ரேடியோ ஆக்டிவ் பொருள்

போலோனியம் -210 ஒரு ரேடியோ ஆக்டிவ் பொருள். இதிலிருந்து வெளியேறும் ரேடியோ கதிர்கள் நம் உடலுக்கு உள்ளே உள்ள பாகங்களை சிதைக்கும் தன்மை கொண்டது. அது மட்டுமல்ல மனித டிஎன்ஏ மற்றம் நோய் எதிர்ப்புதிறனையே மாற்றும் திறன் கொண்டது. ஆனால் இந்த பொருள் ஒரு இறந்தவரை தாக்கியிருக்கிறது என கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இந்த கொடிய விஷத்தை இந்தியாவில் டெஸ்ட் செய்யும் வசதி கூட இல்லை.

​மேரி க்யூரி

இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் பிரபலமான கெமிஸ்ட் மேரி க்யூரி.1898ம் ஆண்டு இவர் இதை கண்டுபிடித்தார். வேதியல் துறையில் பல கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தற்காகடும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த போலோனியம் -210க்கு முதன் முதலில் ரேடியம் எஃப் என பெயரிடப்பட்டது. இந்த போலோனியம் -210ன் சிறிய துகள் நம் உடலுக்குள் சென்றாலும் நமக்கு மரணம் நிச்சயம். இந்த பொருளுக்கு சுவை இல்லை அதனால் இதை உணவுடன் கலந்தால் அதன் சுவையே அறியாமல் சாப்பிட வாய்ப்பு உள்ளது.

​ஜூலியட் க்யூரி

இந்த போலோனியத்தை சாப்பிட்டு இறந்தது முதல் குழந்தை தான். இதை கண்டு பிடித்த மேரி க்யூரியின் குழந்தை ஜூலியட் க்யூரி இதன் சிறிய பாகத்தை எடுத்து வாயில் போட்டுள்ளார். இதனால் அந்த குழந்தை அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டது. அதன் பின் பாலஸ்தீனத்தின் தலைவர் யாசர் அராபத்தும் இதன் காரணமாகவே இறந்ததாக கருதப்படுகிறது.

​பரிசோதனை

இந்த குற்றச்சாட்டு வந்ததுமே இவரது புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது உடலில் போலோனியம் -210ன் ரேடியோ ஆக்டிவ் கதிர்கள் இருப்பதாக சுவிட்சர்லாந்திலிருந்த வந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்