மனைவியை கொன்ற நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவன்!

Date:

இந்தூர் சுடாமா நகரைச் சேர்ந்தவர் நரேந்திர விஷ்வையா, இவர் வசித்து வரும் பகுதிக்கு அருகே வசித்த வந்த ஒரு குடும்பத்தினர் தன் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இவரது மனைவியில் அவர்கள் வளர்த்து வந்த நாய் கடித்து விட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்வையா தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அந்த நாயை சுட்டுக்கொன்றுள்ளார். இதை பார்த்த அந்த நாயின் உரிமையாளர்கள் போலீசில் புகார்அளித்தனர் போலீசார் வந்து விசாரித்த போது நாயை தான் தான் சுட்டுக்கொன்றதாக விஷ்வையா ஒப்புக்கொண்டார். அவரிடம் லைசென்ஸ் உள்ள துப்பாக்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நாயின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஷ்வையாவை கைது செய்தனர். விசாரணையில் அந்த நாய் அப்பகுதியில் உள்ள பலரை கடித்துள்ளதாகவும், தற்போது தன் மனைவியை கடித்துவிட்டதால் ஆத்திரத்தில் அதை சுட்டதாக தெரிவித்தார்.

போலீசார் இது குறித்து கூறும் போது விஷ்வையா சொல்வது உண்மையாக இருந்தாலும் அந்த நாயின் உரிமையாளர்கள் மீது அவர் புகார் அளித்திருக்க வேண்டும்.நாயை கொலை செய்ய அவருக்க அதிகாரமில்லை என கூறினர்.

தன் மனைவியை நாய் கடித்ததால் ஆத்திரத்தில், அந்த நாயை கணவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்