தலைமறைவான கொரோனா நோயாளி!

Date:

கொரோனா தொற்று உறுதியான பின்னர் வீட்டிலிருந்து தலைமறைவான நபரை கண்டறிய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொரளை பொலிஸ் பிரிவிலுள்ள, மகசீன் வீதியில் வசிக்கும் இளைஞனே டிமிக்கி விட்டுள்ளார்.

28 வயதான சங்கீத் தனுஷ்க தபரே, பி.சி.ஆர் பரிசோதனையால் மே 26 அன்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

இதையடுத்து, அவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்ல பொரளை காவல்துறை அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் நேற்று (28) வீட்டிற்கு  சென்றபோது, ​​அவர் வீட்டில் இருக்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறியதை குடும்பத்தினர்  அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களை தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோருகின்றனர்.

பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி- 071 85 91 587
பொரளை பொலிஸ் நிலையம் – 011 26 94 019

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்