மாலி அதிபர், பிரதமர் மற்றும் இராணுவ அமைச்சர் கைது!

Date:

மாலி பிரதமர், அதிபர் உள்ளிட்ட ஆட்சியாளர்களை அந்நாட்டு இராணுவம் கைது செய்து சிறைபிடித்துள்ளது.

மாலி நாட்டின் அதிபர் பாண்டாவ், பிரதமர் மோக்டார் அவுனே, ராணுவ அமைச்சர் சவுலேமான் டவுகோர் ஆகியோரை அந்நாட்டின் ராணுவ வீரர்கள் கைது செய்து கத்தி ராணுவத் தளத்தில் அடைத்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அதிகர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்தாவும் இதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென ராணுவத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு ஆட்சியை இழந்தார்.

அவருக்கு முன் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ கிளர்ச்சியின்போது அப்போதைய அதிபர் அமதாவு தவுமானி தவுரேவும், மற்ற மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டு இதே பாணியில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர்.

இந்த வரிசையில் தற்போதைய அதிபர், பிரதமர், ராணுவ அமைச்சர் ஆகியோரை ராணுவம் கைது செய்து சிறைபிடித்துள்ளது. இதனால் மாலியில் நெருக்கடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலியில் ஏற்கெனவே தீவிரவாத கும்பல்கள், ராணுவ சண்டை, அரசியல் நெருக்கடி, வறுமை என பல பிரச்சினைகள் நீடிக்கின்றன. இந்நிலையில், ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலி ஆட்சியாளர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்