28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
குற்றம்

வவுனியாவில் வீடு புகுந்து பயங்கரம்: 3 பெண்கள், 3 ஆண்கள் வைத்தியசாலையில்!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தைசேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றயதினம் இரவு 11 மணிளவில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதல் காரணமாக ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 26, 38, 52 வயதுடைய பெண்களும், 63, 29, 38 வயதான ஆண்களுமே காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment