பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை தம்பகாமம் இன்நாசி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை (23) மீட்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சகோதரரால், பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டதாக பளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

பெண்ணின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணைகள் நிறைவடைந்தபின் பிரேத பரிசோதனை மற்றும்
பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பதவுள்ளதாக பளை பொலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்