உலகத் தலைவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்ட தலைவர் மோடி : ஆஸ்திரேலிய கருத்துக்கணிப்பு!

Date:

உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் மொத்த பரவலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை மோசமாக் கையாண்டு வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஆஸ்திரேலியாவின் தி கன்வர்சேஷன் என்னும் செய்தி தளம் கருத்துக் கணிப்பு நிகழ்த்தியது.

இந்த கருத்துக் கணிப்பில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட உலக தலைவர்கள் யார் யார் எனக் கேட்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் போல்செனரோ, முன்னாள் அமெரிக்க அதிபர் டிர்மப், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாசென்கோ ஆகியோர் பெயர் தரப்பட்டன. சமீபத்தில் இந்த கருத்துக் கணிப்புக்களின் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இந்த கருத்துக் கணிப்பில் 75,740 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களில் 90% பேர் மோடிக்கு வாக்கு அளித்துள்ளனர். அதாவது பிரேசில், பெலாராஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஆகியோரை விட கொரோனாவை கையாள்வதில் பிரதமர் மோடி மிகவும் மோசமாகச் செயல்பட்டதாக மக்களில் பெரும்பாலானோர் வாக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

அமெரிக்க- ஈரான் பேச்சில் முன்னேற்றமில்லை: ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட உத்தரவிட்ட ட்ரம்ப்

இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, ​​ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக்...

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்