மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

Date:

தவிஸ்ரீபுர பிரதேச பாடசாலை ஆசிரியை ஒருவர், தனது மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் மூலம் ஆபாச காணொளிகளை பகிர்ந்ததாகக் கூறப்பட்டு, இன்று (06.01.2025) தவிஸ்ரீபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், எட்டாம் வகுப்பு மாணவியான தனது மகளின் வாட்ஸ்அப்பில் குறித்த ஆசிரியை ஆபாச காணொளிகளை அனுப்பியதாக அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தில் (NCPA) புகார் செய்திருந்தார்.

இதையடுத்து, தவிஸ்ரீபுர பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரான ஆசிரியையை கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ஆசிரியை முன்னதாகவும் பாடசாலை கணினி வகுப்பறையில் வெளிப்படையான வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டியதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியை கெபிதிகொல்லேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், தவிஸ்ரீபுர பொலிஸார் சம்பவத்துக்கு தொடர்புடைய மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வகை சம்பவங்கள், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்களிடமும் சமூகத்திடமும் கவலைக்குறிகளை ஏற்படுத்துவதுடன், கல்வித் துறையின் ஒழுங்கமைப்பு மீதான புதிய கேள்விகளையும் எழுப்புகிறது.

spot_imgspot_img

More like this
Related

அஜித் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி: முதல்வர் விஜய் காதலியுடன் சென்றார்!

அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தன்னுடன்...

எரிபொருள் விலைகள் மீண்டும் எகிறின!

செபெட்கோ நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்