தடையை மீறி முள்ளிவாய்க்கால் அஞ்சலி; அப்படியே ஒரு குரூப் போட்டோ: மட்டக்களப்பில் 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

Date:

மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதித்து நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், விமலசேன லவக்குமாரின் பெயரும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை நினைவேந்தலை அனுட்டித்த லவக்குமார், தன்னால் கையாளப்படும் முகப்புத்கத்தில் நினைவஞ்சலி படங்களை பதிவிட்டார்.

இதையடுத்து அவர் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அந்த புகைப்படங்களின் அடிப்படையில் நினைவஞ்சலியில் ஈடுபட்ட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் பெண்கள்.

அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...

டுபாயில் சிக்கிய மற்றொரு புள்ளி

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்