மரண வீட்டுக்குள் நுழைந்து திருடிய தம்பதி கைது!

Date:

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் மரணச்சடங்கில் உறவினர் போல பாசாங்குகாட்டி கிளிநொச்சிப்பகுதியைச் சேர்ந்த கணவன் மணைவி இருவரும் வீட்டில் உள்ள அலுமாரியினை திறந்து அதிலிருந்த ஜந்து இலட்சம் ரூபா பணமும் ஒரு பவுண் தங்கநகையினையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

பின்னர் மரணச்சடங்கு முடிவுற்றபின் வீட்டு அலுமாரியினை திறந்தபோது பணம் நகை இல்லாததை உணர்ந்தவர்கள் தேடியபோதும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகம் கொண்டு தருமபுரம் போலிசாரிடம் முறைபாடு பதிவு செய்யப்பட்டதுடன் விசாரனைகளை ஆரம்பித்த போலிசார் கண்காணிப்பு கமரா மூலம் திருடர்களை இனங்காண்டனர்.

நேற்று (18) திருடர்களான கணவன் மனைவி இருவரும் பொலிசாரல் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாத தருமபுர போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி ஹேரத் தெரிவித்தார்.

திருட்டு தம்பதிக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் அரசு அனுமதி மறுப்பு

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வலியுறுத்தி திமுக மாணவர் அணி இன்று...

கலாபக்காதலனுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கும் விளக்கமறியல்!

அம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இயன்முறை சிகிச்சையாளர் ஒருவர், நுவரெலியாவில் உள்ள...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கே.பாக்யராஜ் உடல் தகனம்

இயக்​குநரும், நடிகரு​மான கே.​பாக்யராஜ் உடல் 72 குண்​டு​கள் முழங்க அரசு மரி​யாதை​யுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்