தர்மபுரம் சோதனைச்சாவடியில் அமைதியின்மை!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் நெத்தலியாறு சோதனைச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறி, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தர்மபுரம், நெத்தலியாறு பகுதியில் இராணுவத்தினர் இன்று வீதித்தடை அமைத்து, போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.

இதனால், முடக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள மக்கள் அவசர தேவைகள் கருதியும் வெளியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. கர்ப்பிணிகள், புற்றுநோயாளர்கள், சத்திரசிகிச்சைக்கு செல்பவர்கள் என பலர் வந்து, தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த இடத்தில் இருந்த கிளிநொச்சி செய்தியாளர் தர்மலிங்கம் சிவா நிலைமையை நேரலையாக பதிவிட்டார்

அதில், கர்ப்பிணி பெண்ணொருவர் தன்னை தொடர்ந்து பயணிக்க முடியாதென வழிமறித்த இராணுவம், வீதியிலேயே குழந்தை பிரசவிக்குமாறு தெரிவித்ததாக கூறினார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று கழுத்து பகுதியில் சத்திரசிகிச்சை நடைபெறவுள்ள பெண்ணொருவர், தெல்லிப்பளைக்கு சிகிச்சைக்கு வர வேண்டிய புற்றுநோயாளர் என பலர் வழிமறிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது.

நீண்ட இழுபறியின் பின்னர்- பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் பின்னர்- வைத்திய தேவைக்காக செல்பவர்கள் மட்டும், சோதனைச்சாவடியை கடக்க அனுமதிக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்