27.8 C
Jaffna
February 6, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம்.

12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள்.

யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் இன்னும் சரியாக அறிக்கையிடப்படாத நிலைமை காணப்படுகிறது.

தமிழ் மக்கள் ஒரு தேசமாக ஒன்றிணைந்து, இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டிக்கிறார்கள். எனினும், தற்போதைய அரசு தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமைக்கும் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி அஞ்சலி நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதித்தது. எனினும், நேற்று மாலையே முல்லைத்தீவு பகுதியின் இரண்டு பிரதேச செயலாளர்கள் முடக்கப்பட்டதால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்கில் இன்று யுத்தத்தின் நிறைவை குறிக்கும் வெற்றி மனநிலையுடனான கொண்டாட்டங்கள் இடம்பெறுகிறது. இது இலங்கையில் வெவ்வேறு அடையாளங்களுடனான இரண்டு இனங்கள் இணக்கமில்லாத சூழலில் வாழ்வதை புலப்படுத்துகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘மாவையை நீதிமன்றத்தில் நிறுத்திய போது…’: பழைய நினைவுகளை மீட்ட விக்னேஸ்வரன்!

Pagetamil

தீயில் சங்கமித்தார் மாவை!

Pagetamil

மாவை காலமானார்!

Pagetamil

அர்ச்சுனா எம்.பி கைது!

Pagetamil

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment