மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

Date:

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை கடக்க வீதி ஓரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) இரவு இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கோடைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீதியை கடப்பதற்காக சம்பவ தினமான நேற்று இரவு 9.30 மணியளவில் 3 சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர் இதன் போது வீதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதி ஓரமாக நின்ற சிறுவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த வர் மற்றும் வீதியோரத்தில் நின்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

அவுஸ்​திரேலியா - பங்களாதேஷ் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2வது டெஸ்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்