யாழ் நகரில் யாசகர்கள் அகற்றப்பட்டனர்

Date:

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் கூறுகையில் –

சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம் கோரிக்கை பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

இன்னிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.

அத்துடன் யாழ் மா நகரசபையின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் யாழ் மாநகரசபையின் ஒத்துழைப்புடன் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிநடத்தலில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும் வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் பொலிசாரால் கைதுசெய்யப்படு யாழ் பொலிஸ் நில்சியம் கொண்டுசெல்லப்படு தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் குறித்த நபர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது சிறுவர்கள் பலரும் வியாபார ரீதியில் குறித்த யாசகம் பெறும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து குறித்த சிறுவர்களின் பாதுகாவலர்களாக இருப்போர் எச்சரிக்கப்பட்டு இனிவரும் நாள்காலில் இவ்வாறு செயற்பட மாட்டோம் என்ற ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...

துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி...

யாழில் வாசனை சாவற்காரத்தில் போதைப்பொருள் கடத்தல்

வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்