கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

Date:

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து இன்று புதன்கிழமை (08)  800 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று பகல் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

இதன்போது அங்கு தோணில் கடத்தி கொண்டுவரப்பட்ட வாவிக்கரையில் வைக்கப்பட்ட கசிப்பை எடுத்துச் செல்ல வந்த இருவரை 800 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 25,26 வயதுடையவர்கள் எனவும் கொக்கட்டிச்சோலை முனைக்காடு மற்றும் மாவிலங்குதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.;

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்