தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதாக ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் சனிக்கிழமை அறிவித்தது. இந்தத் தாக்குதல்கள், அமெரிக்காவுடனான தெஹ்ரானின் ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றும் அது விவரித்தது.
“ஹோர்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்திற்காக மூடப்படும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது; எதிரியின் வாக்குறுதி மீறலுக்கு பதிலடியாகவே இந்த முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், எதிரியை அதன் கடமைகளுக்கு இணங்கச் செய்ய மேலும் பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு எடுக்கப்படும்,” என்று அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில் கதம்-அல் அன்பியா மத்திய தலைமையகம் கூறியது.




