தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Date:

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் எம்​.சீனி​வாசன் என்​பவர் தாக்​கல் செய்​துள்ள ரிட் மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மே 13-ம் தேதி தவெக அரசு மீது நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. இதில், வெற்றி பெறு​வதற்​காக மற்ற கட்சி எம்​எல்​ஏக்​களிடம் குதிரை பேரம் நடத்​தப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன.

எனவே, நம்​பிக்கை வாக்​கெடுப்​பின்​போது குதிரை பேரம் நடந்​த​தாக எழுந்​துள்ள புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். மேலும், அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமார​வேல், ஜெயக்​கு​மார், சத்​தி​ய​பா​மா, இசக்கி சுப்​பையா ஆகியோர், தங்​கள் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​துள்​ளனர். இதையடுத்து அவர்​கள் வெற்றி பெற்ற மது​ராந்​தகம், பெருந்​துறை, தாராபுரம், அம்​பாச​முத்​திரம் ஆகிய தொகு​தி​கள் காலி​யாக உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

மக்​கள் தீர்ப்​புக்கு மாறாக, பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு வேறு கட்​சி​யில் இணைந்த 4 பேரும் தேர்​தலில் போட்​டி​யிட தடை வி​திக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில்​ கோரப்​பட்​டுள்​ளது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும்...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை...

ஓமந்தையில் கோயில் பூசை சர்ச்சையில் ஒருவர் கொலை, தாய் படுகாயம்!

வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்