இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கிறது அமெரிக்கா

Date:

இலங்கை உட்பட 60 நாடுகளிலிருந்து அமெரிக்காவினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களுக்கு 10 முதல் 12.5 சதவீதம் வரை மேலதிக வரியை விதிப்பதற்கு அமெரிக்க நிர்வாகம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கனடா, மெக்சிகோ, பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத மேலதிக வரியை விதிக்க பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட மேலும் 45 நாடுகளுக்கு 12.5 சதவீத மேலதிக வரியை விதிக்க பிரேரிக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்தல் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இலங்கை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஆடை மற்றும் துணி இறக்குமதிகளுக்குக் குறைந்த வரி விகிதங்களின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவை அமெரிக்க சந்தைக்குள் அனுமதிக்கும் சிறப்பு பொறிமுறை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த பிரேரணைகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் ஜூலை 6ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், ஜூலை 7ஆம் திகதி அது தொடர்பான பொது விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்