கணவன், பிள்ளைகளை கழற்றிவிட்டு வந்த பெண், காதலன் மீது நம்பிக்கைத்துரோக வழக்கு!

Date:

திருமணத்திற்கு புறம்பான உறவில் உருவான காதல், நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாக இளம்பெண்ணொருவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வவுனியாவை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் திருமணமாகி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். எனினும், அவருக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவு ஏற்பட்டது.

யாழ்ப்பாண காதலனுக்காக, தனது கணவன், பிள்ளைகளை உதறிவிட்டு, ஓடி வந்த அந்தப் பெண், யாழ்ப்பாணத்தில் காதலனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களிலேயே காதலனுடனான உறவு கசந்து, அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தானும், காதலனும் உல்லாசமாக இருந்த சமயங்களில், இதை காதலன் படம்பிடித்து வைத்திருந்ததாகவும், அதை தற்போது தனது நண்பர்கள் வட்டாரங்களில் கசிய விட்டு, நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

காதலன் நம்பிக்கை மோசடி செய்ததாக குறிப்பிட்டு, அந்தப் பெண் தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் சட்டநடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி இளைஞனின் பிணை மனு ஒத்திவைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு...

நாய்களின் வாயை கட்டி வளர்த்தவர் கைது!

நீர்கொழும்பு காவல்துறையினர், கடற்கரை வீதி பகுதியில் உள்ள தனது வீட்டில், தனது...

எச்சரிக்கை: போலி பொதுச்சுகாதார பரிசோதகர்கள்!

பொது சுகாதார ஆய்வாளர்கள் போல் நடித்து, சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகக் கடை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்