கொஸ்லந்த பொலிசார், 11 பாடசாலை மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கர வண்டியைப் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை நேற்று முன்தினம் (07) கைது செய்தனர்.
கொஸ்லந்த நகரத்திலிருந்து மக்கல்தெனிய கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த இந்த முச்சக்கர வண்டியை, பொலிசார் ஆய்வு செய்தபோது, அதில் கூடுதல் பயணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த முச்சக்கர வண்டியில் இருந்த மாணவர்கள் 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடசாலை முடிந்ததும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். கொஸ்லந்தவைச் சேர்ந்த அந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.



