ஈரானிய தூதருக்கான அங்கீகாரத்தை லெபனான் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், அவரை விரும்பத்தகாத நபர் (persona non grata) என அறிவித்து, ஞாயிறுக்குள் லெபனானிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்தது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகளையும் நிறுவப்பட்ட நடைமுறைகளையும் தெஹ்ரான் மீறியதாகக் குறிப்பிட்டு, ஈரானுக்கான லெபனான் தூதரை ஆலோசனைக்காக அமைச்சகம் அழைத்துள்ளது.



