அக்குரேகொட படுகொலை – துப்பாக்கிதாரி ஒருவர் கைது

Date:

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு அமர்த்திய காரும் இன்று (21) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு, கிழக்கில் நாளை மழை

நாளைய தினம் (22) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும்...

‘தனுஷ் சார் ஒரு கலைக்கூடம்’ – மிருணாள் தாகூர் புகழாரம்

தனுஷ் சார் ஒரு கலைக்கூடம் என்று மிருணாள் தாகூர் அளித்த பேட்டியில்...

சிவகார்த்திகேயன் உடன் இணையும் ரம்யா நம்பீசன்

சிவகார்த்திகேயன் – வெங்கட்பிரபு இணையும் படத்தில் ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்