பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிர் வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம் (17) யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும். கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்.

அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும். இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உடப்ட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைக்கிறது.

கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவி கூடு கலைந்து மாணவர்களை தாக்கிய அனர்த்தத்தில் 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரேயொரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள்
பாதிப்புக்குள்ளாக காரணமாக அமைந்தது. இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும்

எனவே இந்த சூழ் நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி
ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாய்தத பயிற்சி வழங்கல்;புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட
அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள்
திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

எம்.பிக்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...

ரூ.500 இலஞ்சம் வாங்கியவர் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்