சத்தமின்றி உருவாகும் பாண்டிராஜின் புதிய படம்

Date:

சென்னையில் சத்தமின்றி புதிய படமொன்றை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

’தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காக பல்வேறு நாயகர்களை அணுகினார் பாண்டிராஜ். ஆனால், பலரும் அடுத்டுத்து படங்களில் நடித்து வந்தார்கள். இதனால் சத்தமின்றி புதிய படமொன்றை தொடங்கிவிட்டார். இதில் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

குறைந்த பொருட்செலவில் குடும்ப பின்னணியில் உருவாகும் கதையாக இதனை இயக்கி வருகிறார். இதன் முழுப்படப்பிடிப்பையும் சென்னையில் ஒரே கட்டமாகவும் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் யார் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக பெரிய நாயகர்கள் படமொன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ். இதற்கான கதை விவாதம் உள்ளிட்டவையும் ஒரு புறத்தில் கவனித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் குமார் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது....

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு பௌத்தபீடங்களும் எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்