முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

Date:

எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை வினோத்​கு​மார் என அறி​முகம் செய்து கொண்​டு, `முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும்’ எனக்​கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். இதையடுத்து, ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் வீட்​டுக்​குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடை​பெற்றது.

சந்​தேகப்​படும்​படி​யான எந்த ஒரு பொருளும் கிடைக்​காத​தால் புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் மிரட்​டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்​டனர்.

அப்​போது எதிர்​முனை​யில் பேசிய நபர், “என் பெயர் வினோத்​கு​மார். நான் தாம்​பரம் சேலை​யூர் கேம்ப் ரோட்​டில் உள்ள டாஸ்​மாக் கடை முன்பு நின்று கொண்​டிருக்​கிறேன். அடை​யாளம் தெரி​யாத இரு​வர் என்னை பலமாக தாக்​கினர்.

இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தும் போலீ​ஸார் வரவில்​லை. இதனால் ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தேன்” என தெரி​வித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் சேலை​யூர் விரைந்து மதுபோதையில் இருந்த வினோத்​கு​மாரை பிடித்து காவல் நிலை​யம் அழைத்து வந்து வி​சா​ரித்​தனர். பின்​னர்​ அவரை எச்​சரித்​து அனுப்​பி வைத்​தனர்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...

பசிலுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்த பல்கலைக்கழக மாணவர் சங்கம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கம் (INTA), சில காலமாக பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது...

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்