உழவு இயந்திரம் கவழ்ந்து ஒருவர் பலி

Date:

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டு நிலையில் அதன் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்

பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடைய முத்துப்பிள்ளை கருணாநிதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றவர் இரவாகியும்; வீடு திரும்பாத நிலையில் அவரை தேடி இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சென்ற போது உழவு இயந்திரம் தடம் புரண்ட நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்