வத்தளையில் சுமார் 300 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ.50 மில்லியனுக்கும் அதிகமாகும்.
பொலிஸாரின் தகவலின் பேரில், நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வத்தளை, பங்களாவத்த பகுதியில் வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் அறைக்குள் இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 மற்றும் 49 வயதுடைய கிராண்ட்பாஸைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



