யாழில் சடலமாக மிதந்த பெண் அடையாளம் காணப்பட்டார்: பின்னணி என்ன?

Date:

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து இன்று மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேவேளை, இன்று மாலை அச்சுவேலி, தோப்பூரை சேர்ந்த பெற்றோர், அச்சுவேலி பொலிஸ் நிலையம் சென்று, தமது மகள் வீடு திரும்பவில்லையென முறையிட்டனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு சென்ற மகள் திரும்பவில்லையென்றனர்.

இராசசிங்கம் சுபாசினி (40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் சிறியளவு மனவளர்ச்சி குன்றியவர் என்றும் தெரிய வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...

போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு

தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, ​​பெருமளவு போதைப்பொருட்களை...

ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்!

போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்