தொழில் அதிபரை மயக்கி நகைகள் திருட்டு: இளம்​பெண் நண்பருடன் கைது

Date:

தொழில் அதிபரை மயக்கி நகைகளைத் திருடிய இளம்​பெண் கூட்​டாளி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, ஆவடி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மணி. தொழில் அதிப​ரான இவர் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி, பெண் தோழி ஒருவருடன் தேனாம்​பேட்​டை​யில் உள்ள ஓர் ஓட்​டலில் அறை எடுத்து தங்​கி​னார். மறு​நாள் காலை எழுந்து பார்த்​த​போது, அந்த பெண்ணை​யும் காண​வில்​லை. அவர் அணிந்​திருந்த 10 பவுன் தங்​கச் சங்​கி​லியை​யும் காண​வில்​லை.

அதி​களவு மது ஊற்​றிக் கொடுத்து மயங்க வைத்​து, தங்​கச் சங்​கி​லியை அந்​தப் பெண் திருடிச் சென்​றது அவருக்​குத் தெரிய​வந்​தது. இதுகுறித்​து, தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் மணி புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், தப்பி ஓடியது குன்​றத்​தூர் சிவன்​தாங்​கல் பகு​தி​யில் வசித்​து​வரும் தீபிகா என்ற தீபலட்​சுமி (22) என்​பது தெரிய​வந்​தது. இவர், தனது கூட்​டாளி​யான மேற்​கு ​மாம்​பலத்​தைச் சேர்ந்த சதிஷ்கு​மார்​(23) என்​பவருடன் சேர்ந்​து, பல தொழில் அதிபர்​களிடம் இதே​ பாணி​யில் திருடியது தெரிய வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருட்டு நகையை விற்​று, அதன்​மூலம் கிடைத்த பணத்​தில் இருசக்கர வாக​னம் வாங்​கி​யுள்​ளனர். வாக​னத்​தை​யும், ரூ.3.14 லட்​சம் பணத்​தை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பின்​னர், அவர்​களை நீதி​மன்​றக் காவலில்​ புழல்​ சிறையில் அடைத்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்