தனது பிறந்தநாளை கொண்டாட கள்ளக்காதலனுடன் ஓயோ சொகுசு ஹொட்டலுக்கு சென்ற இளம்பெண், அங்கு கணவன் வந்ததும், அரைகுறை ஆடையுடன் சுவரேறி குதித்து தப்பியோடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ஓயோ அறைகள் இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹொட்டல்களுடன் ஒப்பிடும்போது ஓயோ அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் ஓயோ அறைகளை பயன்படுத்துகிறார்கள்.
ஒரு ஹொட்டலில் குறிப்பாக ஓயோவில் நீங்கள் பதிவு செய்த ஹொட்டல்களில் போலீசார் எந்த வித வாரண்ட்களும் இல்லாமல் வந்து சோதனை செய்ய முடியாது. அது மனித உரிமை மீறல்கள் ஆகும். மேலும் உங்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆகி இருந்தால், உங்களை கைதும் செய்ய முடியாது அந்த நினைப்பில் அனைவரும் தவறான செயல்களை செய்கின்றனர்.
இந்தநிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ ஹொட்டலில் இந்த சம்பவம் நடந்தது.
மீரட்டைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண், தனது கணவருக்குத் தெரியாமல் ஓயோ ஹொட்டலுக்குச் சென்றிருந்தார். சில நாட்களாக அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த அவரது கணவர், அவரை உளவு பார்க்கத் தொடங்கினார். அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் மனைவியைப் பின்தொடர்ந்தார். இதற்கிடையில், அவர் ஓயோ ஹொட்டலுக்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரது கணவரும் குழந்தைகளும் அங்கு சென்றனர்.
She was in an OYO with her lover.
Her husband arrived there with their kids and caught her red-handed. After that, she ran away.
What is happening in society these days?
pic.twitter.com/Tf9RdZzB0L— ︎ ︎venom (@venom1s) July 10, 2025
இந்த நேரத்தில், தனது காதலனுடன் அறையில் தனியாக இருந்த பெண், தனது இரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ஜன்னலிலிருந்து குதித்தார். தனது கணவரைப் பார்த்தவுடன், அந்தப் பெண் அறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். சுவர் ஏறி குதித்த போது, அந்தப் பெண்ணின் சேலை கலைந்து அலங்கோலமாகிவிட்டது, அதைப் பற்றி கவலைப்படாத அந்தப் பெண், தப்பி ஓடிவிட்டார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.




