ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
சமீபத்திய உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் அதிருப்தியடைந்து தமது பதவிகளை துறந்து வருகிறார்கள்.
அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமிந்த விஜேசிறி, ஹொரொவ்பொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, ரத்தொட்டை தொகுதி அமைப்பாளரும் துணை தேசிய அமைப்பாளருமான ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக செபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரகொட ஆகியோர் தங்கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளனர்.



