வடமராட்சியில் ஜேவிபிக்கு பல்டியடித்த குழு அச்சுறுத்தல்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

Date:

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமது அணியை தேசிய மக்கள் சக்தியின் குழுவினர் மிரட்டியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அல்வாய் பிரதேசத்தை சேர்ந்த வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுவினருமே தமது வாகனத்தை இடைமறித்து, அச்சுறுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி என்ற ஜேவிபிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது அரசியல் ரீதியாக தவறான விளைவுகளை ஏற்படுத்தும், ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே தமிழ் மக்கள் சார்பில் பேச முடியவில்லையென்ற போது, உள்ளூராட்சி உறுப்பினர்கள் வாய்திறக்கவே அனுமதிக்கப்படாது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்கள் உணர தொடங்கியுள்ள நிலையில், ஜேவிபி இந்த அடாவடி வழிமுறைகளை கையிலெடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை, இந்த வட்டாரத்தில் போட்டியிடும் தவநேசன் என்பவர் முன்னர் தமிழ் தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பின்னர் சுயேச்சைக்குழுவாகி தற்போது ஜேவிபிக்கு பல்டியடித்துள்ளார். கடந்த 3 தேர்தல்களில் 3 வெவ்வேறு கட்சிகளில் போட்டியிடுகிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்