வடக்கு மாகாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் அரங்கத்தை நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்காக முன்மொழியப்பட்டுள்ள- மண்டைதீவில் அமைந்துள்ள காணியை இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த பயணத்தில் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகள் தளபதி மேஜர் ஜெனரல் காகன யஹமபாத்தும் கலந்து கொண்டார்.
இதன்போது, அதிகாரிகள் இருப்பிடத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்ததுடன், வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட்டை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட வசதியை மேம்படுத்துவதற்கான ஆரம்ப திட்டங்களைப் பற்றி விவாதித்தனர்.
தற்போது தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் சனத் ஜெயசூரிய, அரங்கத்தை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிக்காக இந்திய பிரதமரிடம் கடந்த வாரம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
“இந்த முயற்சி வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும். கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே தெரிவித்தார்.
“இந்த திட்டத்துடன் நாங்கள் முன்னேறுவோம், இப்போது நாங்கள் இறுதி செய்ய வேண்டியது அவசியம். கடந்த மாதம் இந்திய உயர் ஸ்தானிகருக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன், சனத் கடந்த வாரம் இந்திய பிரதமருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இலங்கை கிரிக்கெட்டும் இந்த திட்டத்தை ஆதரிக்கும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.




