இலங்கை முழுவதும் எரிபொருள் விநியோகம் இன்று (மார்ச் 02) வழக்கம் போல் தொடர்கிறது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.
ஓர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புக்கள் எந்த தடையும் இல்லாமல் விநியோகிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
மேற்கு மாகாணத்திலிருந்து ஏற்கனவே சுமார் 500 எரிபொருள் ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
“நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நின்றால் இந்தப் பிரச்சினை ஏற்படும்” என்றுk் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் வழங்கப்படும் 3% கமிஷனை ரத்து செய்ய பெற்றோலிய கூட்டுத்தாபனம் முடிவு செய்த பின்னர் எரிபொருள் பற்றாக்குறை குறித்த வதந்திகள் எழுந்தன.



